இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு படகுகளுடன் வந்தடைந்தனர்

0 1880

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று இரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு படகுகளுடன் வந்தடைந்தனர்.

காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த 14 பேர் கடந்த 24ஆம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே காரைக்காலிற்கு பிரச்சாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் , அர்ஜூன் ராம் மேக்வாலிடம் மீன்வர்களை விடுவிக்கும் படி கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மீன்வர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தங்களது விடுதலைக்கு உதவியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments