தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3549
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த இரு  நாட்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு பொதுவாக தெளிவாக காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 29 ஆம் தேதி வரை தென்மேற்கு, தெற்கு, தென் கிழக்கு வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments