தேர்தல் பிரசாரம்: தோசை சுட்டு கொடுத்து மக்களை கவர்ந்த திமுக வேட்பாளர் !

0 3141
தோசை சுட்டு கொடுத்து மக்களை கவர்ந்த திமுக வேட்பாளர்

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா உணவகத்தில் தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொகுதிக்கு உட்பட சின்மயாநகர், வேதா நகர் பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்க ஆதரவாளர்களுடன் திரண்டு சென்ற பிரபாகர ராஜா மக்களை சந்தித்து உதய சூரியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த சிறிய உணவகத்திற்கு சென்ற அவர் பக்குவமாக தோசை சுட்டு பிரச்சாரம் செய்தார்.

மேலும் விருகம்பாக்கம் பகுதி மக்களை நேரில் சந்தித்த பிரபாகர் ராஜா, வீடுகளின் படிக்கட்டில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக கூறி வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY