இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 43,846 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 3461
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 43 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 43 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஒன்பதாயிரமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் புதிதாக 27 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையில் மட்டும் ஒரே நாளில் 2982 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒருநாளில் எண்ணூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், சரோஜினி நகர் சந்தையில் மக்கள் சமூக இடைவெளியின்றிக் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

நேற்று மாலை வரை நாடு முழுவதும் 4 கோடியே 46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments