மகாராஷ்டிர முதல்வர் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி

0 2093
மகாராஷ்டிர முதல்வர் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி

காராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆதித்ய தாக்கரே, தனக்கு லேசான அறிகுறிகள் இருந்தாகவும், மருத்துவமனையில் செய்த சோதனையில் பெருந்தொற்று உறுதியாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments