பேருந்தில் பயணம் செய்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த கமல்ஹாசன்

0 5753
பேருந்தில் பயணம் செய்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த கமல்ஹாசன்

கோவை - தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,பேருந்தில் ஏறி, பயணம் செய்து, பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கும் கமல்ஹாசன், காலையில், காந்தி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு கடையில் டீ குடித்த கமல்ஹாசன், பின்னர் மாநகர பேருந்தில் ஏறி, 40 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, பயணம் செய்தார்.

சக பேருந்து பயணிகளிடம் உரையாடிய கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தமக்கு, டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு, கேட்டுக் கொண்டார். வீதியில் இறங்கி, கமல்ஹாசன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments