மநீம பொருளாளர் சந்திரசேகரின் நிறுவனத்தில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை

0 2322

திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் பொருளாளரும், அனிதா தொழில் குழும தலைவருமான சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெறும் வருமானவரிச்சோதனையில், இதுவரையில், 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா சந்திரசேகரின் வீட்டிலும், பிரிட்ஜ்வே காலனி பகுதியில் உள்ள அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனத்திலும், வருமானவரித்துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமையன்று 8 கோடி ரூபாய் பறிமுதல் ஆன நிலையில், வியாழக்கிழமை மேலும் மூன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments