தமிழகத்தில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த முடிவு

0 3360
தமிழகத்தில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதை மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும், தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. நோய்த்தொற்று உறுதியானோருக்குத் தேவையான மருத்துவம் அளிக்கவும், தொடர்பில் உள்ளோருக்குத் தொற்றுள்ளதா எனக் கண்டறிய சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments