”தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 3.29 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது” - சுகாதார அமைச்சகம் தகவல்

0 2259
”தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 3.29 கோடி பேருக்கு தடுப்பூசி” - சுகாதார அமைச்சகம் தகவல்

டுப்பூசி போடத் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் நாட்டில் 30 லட்சத்து 39 ஆயிரத்து 394 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் துவங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

கடந்த ஒன்றாம் தேதி முதல் 60 வயதை கடந்தவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆக இதுவரை மொத்தம் சுமார் 3 கோடியே 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments