அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கார் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு

0 2788
அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கார் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி அருகே அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை சோதனை செய்த விவகாரத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை ஊத்துப்பட்டி அருகே அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகளின் கார்களை தேர்தல் பறக்கும்படை அலுவலர் மாரிமுத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். அப்போது அமைச்சருக்கும் மாரிமுத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாரிமுத்து விளாத்திகுளம் தொகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அது தவறான தகவல் என்றும் அவர் பணியிடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். அதேநேரம் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 2 பிரிவுகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments