அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தூர், போபாலில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு

0 2698
மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் மாவட்டங்களில் இரவு நேரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் மாவட்டங்களில் இரவு நேரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், 14 அல்லது 15ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மகாராஷ்டிராவில் இருந்து சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

போபால், இந்தூர், ஜபல்பூர், மற்றும் குவாலியரில், கடை வைத்திருப்போர் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments