காப்புரிமையை மீறிய குற்றச்சாட்டில் நடிகை கங்கணா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர காவல்துறைக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு

0 3528
காப்புரிமையை மீறிய குற்றச்சாட்டில் நடிகை கங்கணா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர காவல்துறைக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு

காப்புரிமையை மீறியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாநகர காவல் துறைக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் நூற்றாண்டில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் நகர் பகுதியை ஆட்சி செய்த அரசி தித்தா பற்றி எழுத்தாளர் ஆசிஷ் கௌல் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுவதற்காக, நடிகை கங்கனா ரணாவத்துக்கு முழு பிரதியையும் அவர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், ராணி தித்தா பற்றிய திரைப்படம் ஒன்றை எடுப்பதாக கங்கனா அறிவிப்பு வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த ஆசிஷ் கௌல், மும்பை நீதிமன்றத்தில் கங்கனாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments