மியான்மரில் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொல்ல உயரதிகாரி உத்தரவிட்டதை ஏற்க மனமின்றி இந்தியாவுக்கு தப்பி வந்த மியான்மர் போலீஸ்..!
மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல உயரதிகாரி உத்தரவிட்டதை ஏற்க மனமின்றி இரவோடு இரவாக போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.
மியான்மரின் காம்பாட்(Khampat) நகரில், போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லுமாறு கடந்த 27 ஆம் தேதி அவரது மேலதிகாரி உத்தரவிட்டதாக அவர் கூறினார். பலமுறை உத்தரவிட்டும் அதை ஏற்க மனமின்றி வேலையை ராஜினாமா செய்த அவர், கடந்த 1 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன், 3 நாட்கள், ராணுவத்தினரின் கண்களில் படாமல் பயணம் செய்து மிசோரம் மாநிலத்திற்குள் ஊடுருவி வந்திருக்கிறார்.
அவர் குறித்த தகவல்களை ராய்ட்டர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. தாம் மட்டுமின்றி தமது சகாக்கள் 6 பேரும் பொதுமக்களை சுட்டுக்கொல்லும் உத்தரவுக்கு அடிபணியவில்லை என தா பெங் கூறியுள்ளார்.
Comments