சென்னையின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் - காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

0 2987
சென்னையின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் - காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

சென்னையின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர்-காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பாதுகாப்பான முறையில், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வருவதை உறுதிப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், ஒன்பது பதற்றமான வாக்குசாவடிகள் அமைந்துள்ள சைதாப்பேட்டையில் 60 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், நாற்பது போலீசாருடன் அணிவகுப்பு நடத்தினர்.

இதே போல, கீழ்பாக்கம், டி.பி.சத்திரம், பூக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணை ராணுவத்தினர்-காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments