நிலக்கரி டெண்டர் வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

0 930
தமிழக மின் வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டெண்டருக்கான கால அவகாசம், ஏற்கனவே 15 நாட்கள் நீடிக்கப்பட்டு உள்ளதாகவும், வர்த்தக இதழில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மனுதாரருக்கு வழக்கு தொடர தகுதி இல்லை என்று கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments