கங்குலி விரும்பினால் கொல்கத்தாவில் நடக்கும் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கலாம்-மேற்கு வங்க பாஜக

0 1145

ட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் சேருவார் என யூகங்கள் பரவும் நிலையில், வரும் 7 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் அவர் பங்கேற்றால் அதை வரவேற்பதாக, மேற்கு வங்க பாஜக தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் இதை தெரிவித்த மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா, சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருக்கும் கங்குலி, தமது உடல் நிலை அனுமதித்தால் மோடியின் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும், அதை கங்குலி விரும்புவார் என்று தாங்கள் நினைப்பதாகவும் கூறினார். இதய நோய்க்காக இரண்டாவது முறை ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்ட கங்குலி கடந்த ஜனவரி 31 முதல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments