எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தத் தயார் - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

0 1372
எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுடன் 12 சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்கள் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்றார்.

எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் கூறும் குறைகளைக் கேட்க உச்சநீதிமன்றம் அமைத்த குழு இன்னும் தனது அறிக்கையை வழங்கவில்லை எனவும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments