சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு

0 1287
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஏ.கே.கோயல் இந்த விபத்துத் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்பட 19 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 நபர் கொண்ட விசாரணைக் குழு ஒரு வாரத்திற்குள் சம்பவ இடத்தை நேரில் விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments