சமூக செயல்பாட்டாளரான திஷா ரவி கைது விவகாரம் - அமைச்சர் அமித்ஷா கருத்து

0 3187
சமூக செயல்பாட்டாளரான திஷா ரவி கைது விவகாரம் - அமைச்சர் அமித்ஷா கருத்து

குற்றவாளியின் வயது, தொழில், பாலினம் போன்றவை முக்கியம் அல்ல என்று போலீசார் விளக்கியுள்ளதை மத்திய அமைச்சர் அமித்ஷா சுட்டிக் காட்டியுள்ளார்.

சமூக செயல்பாட்டாளரான 23 வயது இளம் பெண் திஷா ரவி டூல் கிட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

பிரிவினை வாதிகளுடன் இணைந்து நாட்டில் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார் எனவும் திஷா ரவிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.

கட்சி சார்பற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திஷா ரவிக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

எதிர்ப்பாளர்களுக்கு பதிலளித்துள்ள அமித் ஷா வழக்குக்கு தொடர்பில்லாத வயது பாலினம் போன்ற பிரச்சினைகளை எழுப்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீசார் வழக்கை நியாயமாக விசாரணை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments