வாக்குப்பதிவு நாள் அன்று தொகுதிக்கு வர இயலாதவர்களுக்கும் வாக்களிக்க வகை செய்யக் கோரி வழக்கு... தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்

0 2267
வாக்குப்பதிவு நாள் அன்று தொகுதிக்கு வர இயலாதவர்களுக்கும் வாக்களிக்க வகை செய்வது குறித்து பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வாக்குப்பதிவு நாள் அன்று தொகுதிக்கு வர இயலாதவர்களுக்கும் வாக்களிக்க வகை செய்வது குறித்து பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி கே.சத்யன் என்பவர் தாக்கல் செய்த பொது நலமனுவில், இப்போது ஏராளமானவர்கள், கல்வி, வேலை, வர்த்தகம் உள்ளிட்ட பல காரணங்களால் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நிலையில் வாக்குப்பதிவு நேரத்தில் தொகுதிக்கு வர இயலாத நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் அப்படிபட்டவர்கள் வாக்களிக்க புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments