இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் : 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவின் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம் - மத்திய அரசு

0 1866
இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள மூன்றாம் பிரிவினரான 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோவின் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள மூன்றாம் பிரிவினரான 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  கோவின் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

இவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் துவக்கப்பட உள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவின் செயலியில் பதிவு செய்வதுடன் தாங்கள் விரும்பும் தடுப்பூசி மையங்களையும், நாட்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இவர்கள் கடைசியாக வெளியான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தங்களது வயது விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பிரிவில் சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments