புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை

0 1838
புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை

புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பதவியேற்கிறார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக துணை நிலை ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

அதன்படி இன்று புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கவுள்ளார். தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன், துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பு மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments