சேப்பாக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது வீரர்களை சந்திக்க மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரால் பரபரப்பு

0 4757

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியின் போது தடுப்பு வேலியைத் தாண்டி இங்கிலாந்து வீரர்களைச் சந்திக்கச் சென்ற ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா சூழலில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது, ரசிகர் ஒருவர் பார்வையாளர் மாடத்தில் இருந்து இறங்கித் தடுப்பு வேலியைத் தாண்டிச் சென்று இங்கிலாந்து வீரர்களைச் சந்திக்க முயன்றார். 

இதையடுத்து அந்த இளைஞரை மைதானத்தை விட்டுக் காவலர்கள் வெளியேற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments