குறித்த காலத்துக்குள் வழங்கப்படாத ஓய்வுக்காலப் பணப்பயன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வழங்க நீதிபதி உத்தரவு

0 3577
குறித்த காலத்துக்குள் வழங்கப்படாத ஓய்வுக்காலப் பணப்பயன்களுக்கு ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த காலத்துக்குள் வழங்கப்படாத ஓய்வுக்காலப் பணப்பயன்களுக்கு ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநர், நடத்துநர்களாகப் பணியாற்றிய 11 பேர் தங்களுக்கு ஓய்வுக் காலப் பணப்பயன்களை வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 விழுக்காடு வட்டி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஓய்வுக்காலப் பணப்பயன்களுக்கு 6 விழுக்காடு வட்டி வழங்க உத்தரவிட்டார்.

இந்தத் தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாதத் தவணைகளாக வழங்க வேண்டும் எனவும், இந்தக் காலக்கெடுவுக்குள் வட்டித் தொகையை வழங்காவிட்டால், 10 விழுக்காடு வட்டி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெற வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments