விருதுநகரில் விபரீதம்..காய்ச்சலுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து சென்ற பள்ளி மாணவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலி

0 20652
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நாட்டு வைத்தியம் பார்த்து சென்ற பள்ளி மாணவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நாட்டு வைத்தியம் பார்த்து சென்ற பள்ளி மாணவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி - முத்துலட்சுமி தம்பதியரின் மகன் ஹரிஷுக்கு , கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், பட்டம்புதூருக்கு  நாட்டு வைத்தியம் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. வைத்தியம் முடித்த பின்னர், வீடு திரும்பிய போது சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையாக மருத்துவம் பயின்று, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் மட்டுமே காண்பித்து, மருந்து, மாத்திரைகளை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறி வரும் நிலையில், இந்த துயரகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments