உத்தரகாண்ட் வெள்ளத்தில் பணியாளர்கள் 93 பேரை காணவில்லை - மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

0 2180
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் என்டிபிசி எனப்படும் தேசிய அனல் மின் உற்பத்தி கழக பணியாளர்கள் 93 பேரை காணவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் என்டிபிசி எனப்படும் தேசிய அனல் மின் உற்பத்தி கழக பணியாளர்கள் 93 பேரை காணவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுரங்கத்தில் 39 பேர் சிக்கி உள்ளனர் என்றார்.

பனிச்சரிவு ஏற்படும் போது தொழிலாளர்களை எச்சரிக்கும் வகையில் கருவிகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

உயிரிழந்த என்டிபிசி தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ள பாதிப்பால் என்டிபிசிக்கு 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆர்கே சிங் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments