அடுத்த ஆண்டுக்குள் அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேரும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1140

டுத்த ஆண்டுக்குள் அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேர்ந்து விடுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், இதுவரை 11 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துள்ளன என்றார். அடுத்த மாதத்திற்குள்  17 விமானங்களும், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் மீதமுள்ள 8 விமானங்களும் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என்றார்.

ராணுவ தளவாட உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டுமென்பதே அரசின் நோக்கம் என்ற அவர், 101 வகையான தளவாடங்களை இறக்குமதி செய்வதில்லை என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்வது என்றும் அரசு முடிவு எடுத்துள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments