தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலியின் செயல்பாடு நிறுத்தம்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து தமிழகத்தில் டிரீம் லெவன் செயலியின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.
அனைத்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கும் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழகத்தில் டிரீம் லெவன் செயலி பிற்பகல் 3 மணியில் இருந்து செயல்படவில்லை.
தமிழகத்தில் வசிப்போரும், வங்கி கணக்கு வைத்திருப்போரும் டிரீம் லெவன் செயலியை பயன்படுத்த முடியாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments