இம்மாத இறுதியில் இருந்து மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

0 1179
இம்மாத இறுதியில் இருந்து மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

ந்த மாத இறுதியில் இருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி ஊசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1 கோடி தடுப்பூசி மருந்தில் இன்னும் 63 லட்சம் மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த மருந்துகள் 6 மாத காலத்தில் காலாவதி ஆகிவிடும். எனவே விரைவில் மருந்துகளை பயன்படுத்தி விட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாத இறுதியில் இருந்து மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments