ஓடும் ரயிலில் ஆயிரம் துப்பாக்கித் தோட்டாக்கள்... அதிர்ந்த ரயில்வே போலீசார்!

0 3388

அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் ஆயிரம் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.

பொங்கைகயான் என்ற இடத்தில் ஓடும் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பையில் ஏராளமான சிறு சிறு பெட்டிகள் இருப்பதைக் கண்டனர்.

அதனைச் சோதனை செய்த போது அதில் பயன்படுத்தும் நிலையில் இருந்த ஆயிரம் துப்பாக்கித் தோட்டாக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அது எந்த வகையான தோட்டா? யார் கொண்டு வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments