இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி

0 5043
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்

ந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று பி.சி.சி.ஐ.யும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன.

15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பேர் வரை 2-வது டெஸ்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் 360 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments