சென்னையில் 10 ஆண்டுகளில் 7,994 குழந்தைகளை காவல் துறை மீட்டுள்ளது -காவல் ஆணையர்

0 1165
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 110 குழந்தைகள் காணாமல் போனதாக வந்த புகார்களில் 7 ஆயிரத்து 994 குழந்தைகளை காவல்துறை மீட்டுள்ளதாக ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 110 குழந்தைகள் காணாமல் போனதாக வந்த புகார்களில் 7 ஆயிரத்து 994 குழந்தைகளை காவல்துறை மீட்டுள்ளதாக ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆபரேஷன் ஸ்மைல் என்ற குழந்தை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வில் பங்கேற்ற அவர் இதை தெரிவித்தார்.

சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 80 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும், 50 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட 2,000 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments