ஆன்-லைன் வகுப்பு மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0 7468

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் இலவசமாக 2 ஜி.பி. டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, 9 லட்சத்து 69 ஆயிரத்து 047 கல்லூரி மாணவர்களுக்கு எல்காட் நிறுவனம் மூலம் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதற்காக மாணவர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments