அனைத்து கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தாதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகேள்வி

0 1845
அனைத்து கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தாதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகேள்வி

னைத்து திறந்த வெளி கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தாதது ஏன்? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர முத்திரையர் முன்னேற்ற சங்க கூட்டத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜீ.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்ததால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தடை விதிக்க மறுத்து, கூட்டத்தின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments