காஷ்மீரில் மீண்டும் பனிப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடத்த திரையுலகினர் ஆர்வம்

0 1166
காஷ்மீரில் மீண்டும் பனிப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடத்த திரையுலகினர் ஆர்வம்

காஷ்மீரில் பனிமூடிக் கிடக்கும் ரம்மியமான சூழலில் மீண்டும் அங்கு பாலிவுட் படப்பிடிப்புகளை நடத்துவது குறித்து தயாரிப்பாளர்களும் காஷ்மீரின் சுற்றுலா நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

1960 மற்றும் 70களில் சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத்திற்கு மாறிய போது ஏராளமான இந்தி மற்றும் தமிழப்படங்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன.

இந்திப்படங்களின் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீரில் தீவிரவாதத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

தற்போதைய பாதுகாப்பு சூழல் மாறியுள்ளதுடன் இயற்கையும் அழகை வாரியிறைத்துள்ளதால் அங்குள்ள படகு சவாரி, ஏரிகளில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments