சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை

0 3660
சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை

சிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இந்த மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இளவரசிக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க அவரை இன்று அழைத்துச் செல்ல உள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments