சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் - அடார் பூனாவாலா

0 3464

தீ விபத்து காரணமாக பிசிஜி மற்றும் ரோடா தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனே அருகே உள்ள அந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, தீ விபத்து காரணமாக, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே சீரம் நிறுவனத்திற்கு சென்ற மகாராஷ்டிரா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டீல், நிறுவன தலைவர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேசினார். தடயவியல் துறை நிபுணர்களும் அந்த கட்டடித்தில் மாதிரிகளை சேகரிக்க ஆய்வு மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments