கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.730 கோடி பரிசு- எலன் மஸ்க் அறிவிப்பு

0 3176
கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.730 கோடி பரிசு- எலன் மஸ்க் அறிவிப்பு

கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன.

புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு திறன் வாய்ந்த தொழில்நுட்பமே கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய நல்ல தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments