கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம்

0 1505

ல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்தது. இதில், 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். சீன தரப்பில் 35 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், குடியரசு தினம் நெருங்குவதையொட்டி, கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியரசு தினத்தன்று வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments