நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு 30 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு; அனைத்து கட்சியினரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

0 1618
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு 30 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு; அனைத்து கட்சியினரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இதேபோல் அன்றைய தினம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments