ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்... 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

0 4288
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவியதில் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவியதில் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூலா என்ற அந்த கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி 10 பேர் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை மேலும் 10 பேர் திடீர் மயக்கமுற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் ஏலூரில் இதேபோன்ற மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பலர் திடீர் திடீரென மயங்கி விழுந்த காட்சிகள் வெளியாகின. அதே பாணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதால், மாநில அரசு சார்பில் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments