மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல், மதுக்கடை ஊழியரை கத்தியால் தாக்கிய கும்பல்.. புதுச்சேரியில் சம்பவம்

0 1524
புதுச்சேரியில் மதுபானக்கடையில், மது அருந்திய ஒரு கும்பல், பணம் கேட்ட ஊழியரை கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் மதுபானக்கடையில், மது அருந்திய ஒரு கும்பல், பணம் கேட்ட ஊழியரை கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுப்பராயன் வீதியில் இயங்கி வரும் அந்த மதுபானக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திய 3 பேர் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வெளியே சென்ற அந்த 3 பேரும் தங்கள் கூட்டாளிகளை அழைத்து வந்துள்ளனர். ஆயுதங்களோடு வந்த அந்த கும்பல், மதுபானக்கடை ஊழியர் முருகன் என்பவரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது.

தொடர்ந்து மதுக்கடை மீதும் கற்களைக் கொண்டு தாக்கிய அந்தக் கும்பல் பின் அங்கிருந்து தப்பிச் சென்றது. ரௌடிகளிடமிருந்து காயங்களோடு தப்பியோடிய முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments