ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் 3,129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்

0 1308

இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அந்த வகையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பங்கேற்றனர். முதல்கட்டமாக நேற்று மட்டும் ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments