அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் ரூ. 5 லட்சம் நன்கொடை

0 2240
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா என்னும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பணி தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 27 வரை நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களிடம் நிதி திரட்டப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து நூறு ரூபாய்க்குக் காசோலையை வழங்கியுள்ளார்.

இதேபோல் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments