இரண்டாவது நாளாக பல்வேறு மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப கோவிஷீல்ட் மருந்து விநியோகம்

0 1396
இரண்டாவது நாளாக பல்வேறு மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப கோவிஷீல்ட் மருந்து விநியோகம்

ரண்டாவது நாளாக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நேற்று கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசிகள் நாளை மறுநாள் முதல் போடப்பட உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப தடுப்பூசி விநியோகத்தின் முதல்கட்டம் முடிந்திருப்பதாகவும் எந்த மாநில அரசுக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மருந்துகளின் ஒருகோடியே 65 லட்சம் டோஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments