ரயில் பெட்டி, தண்டவாளத்துக்கு இடையே தவறி விழ இருந்த பெண் பயணியை விரைந்து மீட்ட ரயில்வே போலீசார்

0 2077
ரயில் பெட்டி, தண்டவாளத்துக்கு இடையே தவறி விழ இருந்த பெண் பயணியை விரைந்து மீட்ட ரயில்வே போலீசார்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயல்கையில் பிடி நழுவி தண்டவாள பகுதிக்குள் தவறி விழ இருந்த பெண் பயணியை ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டு மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிளாட்பார்ம் பகுதியில் நிற்க ஏதுவாக ரயில்  மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ரயில் நிற்பதற்கு முன்பு அதிலிருந்து சிவப்பு சேலை கட்டிய பெண் பயணி ஒருவர் இறங்க முயன்றார்.

அப்போது கைப்பிடி நழுவவே, பெட்டிக்கும், தண்டவாளத்துக்கும் இடையேயான பகுதியில் தவறி விழ இருந்தார். 

இதைக்கண்ட  ரயில்வே போலீசார் 2 பேர் பாய்ந்தோடி சென்று தண்டவாளத்துக்குள் விழாமல் பெண் பயணியை பிடித்து இழுத்து காப்பாற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments