செம்மரக்கடத்தல் வழக்கு: விவேக் ஜெயராமனின் மாமனாரிடமிருந்து கைத்துப்பாக்கி, 1.5 டன் செம்மரக்கட்டைகள், கார்கள் பறிமுதல்

0 4109
செம்மரக்கடத்தல் வழக்கு: விவேக் ஜெயராமனின் மாமனாரிடமிருந்து கைத்துப்பாக்கி, 1.5 டன் செம்மரக்கட்டைகள், கார்கள் பறிமுதல்

செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவேக் ஜெயராமனின் மாமனாரிடம் இருந்து கைத்துப்பாக்கி - கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 26 வழக்குகளில் தொடர்புடைய "கட்டை" பாஸ்கர் தலைமறைவாக இருந்த சூழலில், கடப்பா போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பாஸ்கரிடம் இருந்து கைத்துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், 300 கிராம் தங்க ஆபரணங்கள், ஒன்றரை டன் செம்மரக் கட்டைகள் , கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ஆந்திராவில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments