சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

0 9468
சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் , காங்கேயம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவையை சேர்த்த மயில்சாமி என்பவர் தனது குடும்பத்துடன், தஞ்சை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, காங்கேயம் அருகே ஓலப்பாயைம் சாலையில், முன்னால் சென்ற காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விதிகளை மீறி சாலை ஓரம் லாரி ஒன்று நின்றுள்ளது.

முன்னால் சென்ற கார் அதனை கவனித்து கடந்த நிலையில், மயில்சாமி குடும்பம் சென்ற கார் லாரியை கவனிக்க முடியாமல் அதிவேகமாக பின்பக்கத்தில் மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் மயில்சாமி, அவரது மனைவி இந்து, தாய் கௌசல்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments