களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு -மேலும் ஒரு பயங்கரவாதி கைது

0 16045
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய கோவையைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்கிற சையது ஆல்வியை தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கத்தாரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ஷிஹாபுதீனை குடியுரிமை அதிகாரிகள் அடையாளம் கண்டு என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments