இந்தியா-ஆஸி. கிரிக்கெட் டெஸ்டின் போது வைரஸ் தொற்று பரவியதா ?

0 2156
கடந்த 26 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் போட்டியை கண்ட ரசிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 26 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் போட்டியை கண்ட ரசிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் மைதானத்திற்கு வந்த இந்த ரசிகரால் அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களை சோதனை செய்ய உள்ளதாக மெல்போர்ன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தோ அல்லது அருகில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்தோ குறிப்பிட்ட ரசிகருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறினார்.

எனவே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கருதி விசாரணை நடப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments